Header Ads Widget

செங்கோட்டை - ஈரோடு ரயிலுக்கு கல்லிடைக்குறிச்சி, தென்காசியில் நிறுத்தம்

ஈரோடு - திருநெல்வேலி ரயில் செங்கோட்டை வரை நீட்டிக்கப்படும் என்று, கடந்த டிசம்பர் மாதம் ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.


அதில், ஈரோடு- திருநெல்வேலி ரயில் ( 16845 ) ஈரோட்டில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு இரவு 9.45 மணிக்கு வந்து, செங்கோட்டைக்கு இரவு 11.15 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை- ஈரோடு ரயில் ( 16846 ) செங்கோட்டையில் இருந்து அதிகாலை 4.50 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு வந்து, அங்கிருந்து 6.45 மணிக்கு புறப்பட்டு ஈரோட்டை மாலை 3 மணிக்கு சென்றடையும்.

மேலும் நீட்டிக்கப்படும் பகுதியில் சேரன்மகாதேவி, அம்பாசமுத்திரம், கடையம், பாவூர் சத்திரம் என 4 நிறுத்தங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், செங்கோட்டைக்கு நீட்டிக்கப்பட இருக்கும் ஈரோடு - திருநெல்வேலி ரயில் கல்லிடைக்குறிச்சி மற்றும் தென்காசியில் நின்று செல்ல ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.